சைதை, சென்னையில் தியாகராஜர் நகருக்கு அடுத்த படியாக மத்தியில் உள்ள ஒரு பகுதி. சைதையில் இருந்து நகரத்தின் எந்த பகுதிக்கும் மிக எளிதாக செல்லலாம் என்ற தகுதியும், வீட்டு வாடகை சற்று குறைவாக இருப்பது என்ற தகுதியும் தவிர பார்த்தல், அது ஒரு சேரி பகுதியாகவே எனக்கு படுகிறது.
எப்படியோ ஒரு ஆண்டு அங்கு சகித்துக் கொண்டு வசித்து, முடியாமல் அந்த இடத்தை காலி செய்து தாம்பரம் சானிடோரியம் பகுதிக்கு இடமாற்றம் செய்து விட்டேன்.
ஒரு ஆண்டு வரை எனக்கு உதவியாக இருந்த நண்பன் பாலா அவர்களுக்கும், அவருடைய நண்பர்கள் சரவணன், மாரியப்பன், சித்தப்பா (பெயர் நினைவுக்கு வரவில்லை, அதனால் அவருடைய இன்னொரு பெயர்) ஆகியோருக்கும் எனது நன்றி.