Showing posts with label கவிஞர். Show all posts
Showing posts with label கவிஞர். Show all posts

Friday, June 24, 2011

பிறந்த நாள் - கண்ணதாசன்


கவி உலகில் பேரரசராக, காவியத்தாயின் இளையமகனாக விளங்கிய மதிப்பிற்குரிய திரு. கண்ணதாசனின் பிறந்தநாளன இன்று, அவரை நினைவு கூறுகிறேன்.





ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோல மயில் என் துணையிருப்பு
இசை பாடலிலே என் உயிர் துடிப்பு
நான் காண்பதெல்லாம் அழகின் சிரிப்பு!

காவியத் தாயின் இளையமகன்
காதல் பெண்களின் பெருந்தலைவன்
மானிட ஜாதியில் தனிமனிதன் நான்
படைப்பதனால் என்பேர் இறைவன்!

மானிட இனத்தை ஆட்டி வைப்பேன் அவர்
மாண்டுவிட்டால் அதை பாடிவைப்பேன் நான்
நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த
நிலையிலும் எனக்கு மரணமில்லை! 

Thursday, February 24, 2011

ரசித்தது - பட்டிமன்ற காட்சி

இப்படியும் யோசிக்க முடியும் என்ற உதரணத்துக்கு கவிஞர் இனியவன். அவரின் பேச்சுக்கும் மற்றும் கற்பனை திறனுக்கும் வாழ்த்துக்கள்



Sunday, August 30, 2009

ஆண்களே யோசிப்பிர்

கவிஞர்கள் பெண்ணை மலர், நிலவு, கொடி மற்றும் பலவிதங்களில் பாடினாலும், வர்ணித்தாலும் இலக்கியம்/வரலாறு உடன் ஒப்பிடப்பட போது அது என்னை பொறுத்த வரையில் கொஞ்சம் வேறு பட்டு விடுகிறது. இலக்கியம்/வரலாறு காவியங்களில் வரும் கதாபாத்திரம் மட்டும் தான் உணர்வு உள்ள உயிர்கள். மற்றவை எல்லாம் கவிங்கனின் கற்பனை நதிகள். சமீபத்தில் வரலாற்றுடன் ஒப்பிடப்பட நான் ரசித்த வரிகள்

கம்பன் கண்ட சீதை உந்தன் தாய் அல்லவா
காளிதாசன் சகுந்தலை உந்தன் சேய் அல்லவா
அம்பிகாபதி அணைத்த அமராவதி மங்கை அமராவதி
சென்ற பின்னர் பாவர்களுக்கு நீயே கதி

இந்த பதிவை எழுதும் போது என் நண்பர் சரவணன் உடன் பேசிக் கொண்டு இருந்தேன். அவர் கூறுகையில் என் ஆண் மகனைப் பற்றி குறைந்த பச்சமாவது மாடுகளுடன் கூட ஒப்பிடுவதில்லை என்று வருத்தப்பட்டார். அவர் கருத்துக்கு நானும் கைகொடுப்பதை விட வேறு வழிஇல்லை.. இதற்கு காரணம் என்னவாக இருக்கும் என நினைத்தல் ஆண் கவிஞர்கள் அதிகம் என்பது என் கருத்து. பெண் கவிஞர்கள் இருந்தாலும், பாடல்கள் எழுதுவதில் அவர்கள் ஒரு சதவீதம் தான்