நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் கதையே இல்லாமல் ஆவிகளுடன் மிரட்டிய படம். வெளிநாடுகளில் 13 என்ற எண் ராசி இல்லாததால் இத்திரைப்படத்தில் எங்கு பார்த்தாலும் 13 மாயம். இதே திரைப்படம் ஹிந்தி மொழியில் 13பி என்ற பெயரில் வெளிவந்து உள்ளது.வழக்கமாக வெளிநாடு திரைப்படங்கள் தான் தமிழில் வெளிவரும், ஆனால் முதலில் தமிழில் ஓடிக்கொண்டு இருக்கும் இத்திரைப்படத்தை அங்கு உள்ள இயக்குனர்கள் பார்த்து, ஆங்கிலத்தில் எடுக்க உள்ளனர் என்பது இதன் சிறப்பு.
மாதவன் - உலகநாயகன் கமல்ஹாசன் உடன் நடித்த அன்பே சிவத்திற்கு பிறகு சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்திய நடிகர்.
என்னதான் ஆவிகளின் படமாக இருந்தாலும் சில சமயம், தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கெடுத்து விழுக்கின்ற இயக்குனர்கள் மத்தியில் வெறும் சாதாரண சின்னதிரை தொடரை பயன்படுத்தி திரைப்படம் முடியும் வரை நாற்காலியின் நுனியில் உட்காரவைத்தது தான் இவருக்கு வெற்றி.
ஒலி மற்றும் ஒளி - இல்லையேல் இத்திரைப்படம் இல்லை. இத்திரைப்படத்தை தொலைக்காட்சிலே, கணிப்பொறியிலே பார்த்தல் ஒன்றும் இல்லை. ஒலி மற்றும் ஒளி நன்றாக உள்ள திரைஅரங்கில் பார்த்தல் மட்டுமே பார்த்த மாதரி இருக்கும் என்பது என் கருத்து.
Friday, March 20, 2009
திருநீர்மலை
திருச்சிராபள்ளி மாநகரில் உள்ள ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதரை பார்க்க சென்ற போது ஒரே இருட்டில், தூரத்தில் இருந்து கண்டதால் தரிசிக்க முடியவில்லை என்ற ஏக்கம் திருநீர்மலைக்கு சென்ற போது தீர்ந்தது. தமிழகத்தில் எனக்கு தெரிந்த வரை அனந்த சயனத்துடன் இருக்கும் இரண்டாவது பெரிய ரங்கநாதரை அதுவும் மிகஅருகில் தரிசிக்கும் போது ஏதோ ஒரு மனநிம்மதி.
நேரம் இருந்தால் நீங்களும் சென்று வாருங்கள்
நேரம் இருந்தால் நீங்களும் சென்று வாருங்கள்
Saturday, March 07, 2009
வேலி தோட்டத்தை மேய்கிறது
சுகந்திரமாக தன் கருத்தை வெளியும் உரிமையை கூட இச்சட்டம் மறுக்கிறது என்று என்னும் போது, நாம் இந்திய திருநாட்டில் தான் இருக்கிறோமா என்று ஐயம் எனக்கு ஏற்ப்பட்டு இருக்கிறது.
http://ibnlive.in.com/news/making-nasty-comments-online-can-land-you-in-jail/86799-11.html
http://ibnlive.in.com/news/making-nasty-comments-online-can-land-you-in-jail/86799-11.html
Labels:
இந்தியா,
உரிமை,
சட்டம்,
சுகந்திரம்
அபியும் நானும்
இவ்வாழ்வில் உள்ள உறவுகள் நிரந்தரம் இல்லை. அந்த உறவுகள் தந்த நினைவுகள் மட்டும் தான் நிரந்தரம்
உறவுகளை உயிராக எடுத்து கொள்ளும் மனம், அந்த உறவுகள் பிரியும் போது மட்டும் பக்குவப்பட்ட மனது தேவைப்படுகிறது.
மனதளவில் ஒரு புன்னைகை/ ஒரு கணம் கொடுத்த இயக்குனர் திரு. ராதா மோகனுக்கும், நடிகர்/தயாரிப்பாளர் திரு. பிரகாஷ்ராஜ் அவர்களுக்கும் மனம் திறந்த பாராட்டு.
உறவுகளை உயிராக எடுத்து கொள்ளும் மனம், அந்த உறவுகள் பிரியும் போது மட்டும் பக்குவப்பட்ட மனது தேவைப்படுகிறது.
மனதளவில் ஒரு புன்னைகை/ ஒரு கணம் கொடுத்த இயக்குனர் திரு. ராதா மோகனுக்கும், நடிகர்/தயாரிப்பாளர் திரு. பிரகாஷ்ராஜ் அவர்களுக்கும் மனம் திறந்த பாராட்டு.
செளக்கார்பேட்
வடசென்னை மக்களின் மாபெரும் சந்தை. நான் சைதையில் இருந்து அவ்விடத்திற்கு போய் சேரவே சுமார் இரண்டு மணி நேரம் ஆனது. அங்கு இருந்த இரண்டு மணி நேரத்தில் நடந்தவைகளை பார்த்தல் தி.நகர் வியாபரத்திற்கு மேல் கண்டிப்பாக நடக்கும் என தெரிந்தது. நான் ஆச்சரியப்பட்ட விஷயம் எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்த கை ரிக்சா, மனிதன் இழுக்கும் மூட்டை வண்டி (மதுரையில் கூட இந்த வண்டி இல்லை). இது போல் பல சந்தைகள் உள்ளது என அறிந்து நான் வியந்தேன்.
குறிப்பு: நான் சென்னையில் பல இடங்களுக்கு சென்று உள்ளேன். ஆனால் சத்யம் சினிமாவில் வர கூடிய பெண்கள் எங்கு இருந்து வருகின்றனர் என்ற சந்தேகம் செளக்கார்பேட்டில் தீர்ந்தது :)
குறிப்பு: நான் சென்னையில் பல இடங்களுக்கு சென்று உள்ளேன். ஆனால் சத்யம் சினிமாவில் வர கூடிய பெண்கள் எங்கு இருந்து வருகின்றனர் என்ற சந்தேகம் செளக்கார்பேட்டில் தீர்ந்தது :)
Subscribe to:
Posts (Atom)